Thursday, November 11, 2010

தேர்தல் கால காளான்கள்!!!

மழைக்  கால காளான்கள்
போல்,
தேர்தல் காலத்தில் திடீரெனத் தோன்றும்
அரசியல்வாதிகள்!


அங்கொரு ஒலிபெருக்கி,
இங்கொரு கூட்டம்,
மஞ்சள் சிவப்பென நிறப் பேப்பர்கள்,
தேர்தல் முடிந்தாலும் அள்ளித்தீரா
கஞ்சல்கள்!

கொடிகள் உயரப் பறந்தாலும்,
கொடுத்த வாக்குறிதிகள் ஆழம் பார்க்குமே,
பட்டாசுகள்  முழங்கிட,
பகட்டாய்த் திரிவர் மொட்டை வான்களில்!

கதவினைத் திறந்தால்,
கால்களில் மிதிபடும் கோரிக்கைச் சீட்டுக்கள்,
தேர்தல் முடிவின் பின்,
மக்கள் கோரிக்கைகளின் நிலை போல்!

வாக்குறிதிகள் பல,
வாரி வழங்கும் பொருட்கள் பல,
வட்டமாய் கூட்டம் அமைத்து,
வஞ்சனை மொழிவார் எதிர்க்கட்சிகளை!

நகைச்சுவை ஆரம்பம்,
நான் அவனில்லை,
தாருங்கள் ஆட்சியினைப்
பின் பாருங்கள் என் விளை{வினை}யாட்டை!

சேரிகளிட்குச் செல்வார்
தேர்தல் காலங்களில்,
சேற்றிலே முளைத்த செந்தாமரைகள் தான்,
அரசியல்வாதிகளும்!

தேர்தல் முடிந்தபின்,
"நீங்கள் யார்?"
நான் எங்கே இருக்கிறேன்?......
ஆட்சி கை கூடியபின்
ஆட்டம் ஆரம்பம்!

நேர்மைவாதிகளும் உளர்,
உண்மைதான்,
பெரும்பான்மை புல்லருவிகளில்,
சிறுபான்மை பூச்செடிகள்,
என்றாவது பொலிவதுண்டோ!

காலம் ஒரு அரசியல் ஆட்சி,
காணாமல் போன மக்கள் ஆட்சி,
சுயநலமில்லா பொதுநல ஆட்சி
கானல் நீரே,
காணீர் என்றும்!!!......

No comments:

Post a Comment