"எழுந்திடு மனிதா!!!
உயிர்த்திடு,
உயர்ந்திட வழிகள்,
உலகினில் பல...
தோல்விகள் கண்டு துவளாதே,
தோள் கொடுக்கப் பல தோள்கள் உண்டு,
தோல்வியினூடே வெற்றியின் உதயம்!
தவறாதே,
தவறிய பின் கலங்காதே,
தரணியில் பல தடங்களைப் பதி!
பழிகள் சொல்வார்,
பதுங்கிவிடாதே,
பறந்திடு தடைகள் தாண்டி!
கனவுகள் கண்டிடு,அதனைக்
காட்சிகள் ஆக்க,
கருத்துடன் செயற்படு!
உண்மையாய் வாழ்ந்திடு,
உறக்கத்தைக் குறைத்திடு,
உலகினைக் காத்திட உணர்வாய்ச் செயற்படு!
முயன்று முன்னேறு,
முன்னேற்றங்கள் கண்டிடு,
முன்னுதாரணமாய் வாழ்ந்திட முயன்றிடு!,
மனிதா எழுந்திடு!!!.......

No comments:
Post a Comment